கோவை, டிச.20- ஜனவரி 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் செய் யப்போவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் 108 ஆம்பு லன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந் திரன் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக கணக்கில் இருக்கிறது. ஆனால் அது முழுமையாக இயக்கப்படவில்லை. வார விடுமுறை நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்பு நூற்றுக் கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், சேவையில் இல்லாமால் அகற்றப் பட்டுள்ளது. எனவே, சேவையில் இல்லாத ஆம்புலன்ஸ்களை தங்கு தடை இன்றி இயக்குவதற்கும், 108 ஆம்பு லன்ஸ் ஊழியர்களுக்கு சட்டப்ப டியான எட்டு மணிநேர வேலை வாய்ப்பினை வழங்க வலியுறுத் தியும், தனியார் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தியதற்காக, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்க ளுக்கு மீண்டும் வேலை வழங்க வலி யுறுத்தியும் வரும் ஜனவரி 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருக்கிறோம். அதேபோல், ஜனவரி 3ஆம் தேதி மாநிலம் முழுவதும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, அவர் தெரிவித்தார்.