districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தாலூகாக்குழு  சார்பில் நவம்பர் புரட்சியின் 105 ஆவது தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தாலூகாக்குழு  சார்பில் நவம்பர் புரட்சியின் 105 ஆவது தினம் கட்சி அலுவலகத்தில் தாலூகா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி செங்கொடியை ஏற்றி  வைத்தார். இதையடுத்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநாடு வெற்றியடைய பாடுபட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், கி.மேகவர்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.