districts

img

ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டங்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்தனர்

கோவை, மே 8- கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நக ராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்  வி.செந் தில் பாலாஜி ஆகியோர் துவங்கி வைத்த னர். சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர் கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி ஆகி யோர் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து வ.உ.சி மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் துவக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழா நடைபெற்றது. இதில், தூய்மை இந் தியா திட்டத்தின்கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட் டில் 2 எண்ணிக்கையிலான சாலையில் தேங் கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும்  வாகனங்கள், ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் திடக் கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண் ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப் பட்டது.  மேலும், மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கை யிலான பேட்டரி வாகனங்கள், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டு ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள காசோலை வழங்குதல் போன்ற பணிகள் துவங்கப்பட்டது. அதேபோல வடவள்ளி வீர கேரளம் கவுண்டம்பாளையம் துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூ.860.80 கோடி மதிப்பீட்டில் பாதாளை சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டுதல், வெள்ளலூர் பேரூராட்சி யில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்டத் தில் ரூ.1010.19 கோடி மதிப்பில் பணிகள் துவங் கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது, என்றார்.  நாமக்கல் நாமக்கல் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று நடைபெற்ற அரசு விழாவில் 305 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பில் வனத்துறை அமைச்சர் மருத்துவர்  மா.மதிவேந்தன்  பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச் சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.