districts

img

1000 இடங்களில் போராட்டம் வாலிபர் சங்கம் முடிவு

திருப்பூர், செப்.25- தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் ஆயிரம் இடங்களில்  மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்த  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முடிவெடுக்கப்பட் டுள்ளது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்கு மண்டல  மாவட்டங்களுக்கான பேரவை கூட்டம் புதனன்று இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் செ.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இப்பேரவைக் கூட்டத்தில், திருப் பூர், கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி மாநகர், தேனி ஆகிய மாவட் டங்களில் இருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில் இந்திய  ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தொடக்க உரையாற்ற, மாநிலத்தலைவர் கார்த்திக் நிறை வுறை ஆற்றினார். இதில், மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு  முழுவதும் போராட்டங்களை நடத்த வேண்டும். வரும் அக் டோபர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மக்களுடைய அடிப் படை கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு மண்டலங்க ளில் ஆயிரம் இடங்களில் போராட்டங்களை முன்னெடுப் பது என்று முடிவு செய்யப்பட்டது. இதில், மாநிலப்பொருளாளர் பாரதி, மாநில துணைச்செய லாளர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் பாலாஜி, மாநில  செயற்குழு உறுப்பினர் அர்ஜுன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் முகேஷ், பெரியசாமி, முனீஸ்வரன், சேதுபதி மணி கண்டன், விஸ்வநாதன், இளவரசன், விவேகானந்தன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில், திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.அருள் நன்றி கூறினார்.