districts

தனியார் துறை கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவிகித கூலி உயர்வு வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜூலை 3 – கூட்டுறவு சங்கத்தில் உறுப்பின ராக உள்ள கைத்தறி நெசவாளர்க ளுக்கு கூலி உயர்வு அறிவிக்கப்பட் டது போல, தனியார் துறை கைத்தறி  நெசவாளர்களுக்கும் 10 சதவிகித கூலி உயர்வு வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று திருப் பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங் கம் (சிஐடியு) வலியுறுத்தி உள் ளது. திருப்பூர் மாவட்ட கைத்தறி நெச வாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்  சங்கத் தலைவர் கே.திருவேங்கட சாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது இதில் சிஐடியு மாவட்ட  உதவித் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், சங்க பொதுச் செயலாளர் என். கனகராஜ், பொருளாளர் கோபால், பல்லடம் வைஸ் சுப்பிரமணி ஆகி யோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: நடந்து முடிந்த சட் டமன்ற கூட்டத்தொடரில் கைத்தறித்  துறை அமைச்சர் அறிவித்த கூலி  உயர்வு, கூட்டுறவு சங்கத்தில் உறுப் பினராக உள்ள கைத்தறி நெசவாளர் களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட் டுள்ளது. தனியார் துறையில் உள்ள  பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு இந்த கூலி உயர்வு அமலாவதில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக நடவ டிக்கை எடுத்து தனியார் தொழிலில்  இருக்கக்கூடிய கைத்தறி நெசவா ளர்களுக்கு 10% கூலி உயர்வு அறிவிக்க வேண்டும். தனியார் ஜவுளி உற்பத்தியா ளர்கள் தற்சமயம் கைத்தறி நெச வாளர்களுக்கு மாதக்கணக்கில் பாவு  நூல் கொடுப்பதில்லை. வாரத்திற்கு  இரண்டு சேலைகள் மட்டும் நெசவு  செய்வதற்கு நூல் கொடுக்கிறார்கள். இரண்டு சேலை நெசவு என்பது கைத்தறி தொழிலாளி குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவாது. இது எவ் வளவு சிரமமானது என்பது நடைமு றையில் நெசவு செய்வோருக்கு மட் டுமே புரியும். எனவே மாவட்ட நிர்வா கம் கைத்தறித் துறை உதவி இயக்கு னர், இதுகுறித்து நடவடிக்கை மேற் கொண்டு கைத்தறி துணி உற்பத்தியா ளர்கள் மாதத்தில் 30 நாட்களும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்  திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வடுகபாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான கைத்தறிவு நெச வாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலத் தில் தற்சமயம் வீடு கட்டி குடியிருப்ப தற்கு வங்கிகளில் கடன் பெற தடை யின்மை சான்று தேவைப்படுகிறது. இதையொட்டி பல்வேறு போராட்டங் கள் நடத்தப்பட்டன. தேர்தலுக்கு பின் னர் ஏற்பாடு செய்து தரப்படும் என்று  சொல்லி பல்லடம் வட்டாட்சியர் அலு வலகத்தில் ஒப்புக் கொள்ளப்பட் டது.  எனினும் தேர்தல் முடிந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போராட்ட காலத்தில் சொன்ன வாக்குறுதியின் அடிப்படையில் உடனடியாக தடையின்மைச் சான்றை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.