அவிநாசி,டிச.20- ரூ 1.91 கோடி மதிப்பீட் டில் அவிநாசி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதியில் நிறைவ டைந்த திட்டப் பணிகளை புத னன்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத் தார். அவிநாசி ஒன்றியம் புதுப்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ1.18 கோடி மதிப்பிலான தேசிய ரூபன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாட்டுத் தீவன உற்பத்தியாலை, மற்றும் ரூ72.78 லட்சம் மதிப்பீட்டிலான கட்டப்பட்ட எண்ணை அரவை ஆலை உள்ளிட்டவை களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் திறந்து வைத்தார். இதேபோல, மக ளிர் திட்டத்தின் சார்பில் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் 16 மகளிர் சுய உதவிக் குழு வுக்கு ரூ13.15 லட்சம் மதிப்பீட்டில் கடனுத விக்கான காசோலைகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, சுய உதவிக் குழுக் கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதனையடுத்து, விநாயகர் கோவில் திடல் அருகில் கலைஞர் நூற்றாண்டு விழா, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் இளைஞர்க ளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங் கள் வழங்கினார். இதில் திருமுருகன்பூண்டி ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய நிர்வாகி சந் தோஷ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப் பாளர் அவிநாசியப்பன், திமுக ஒன்றிய இளை ஞரணி நிர்வாகிகள் கோபால், கார்த்தி, பரத் ராஜ், இளையராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.