districts

img

ரூ.1.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தருமபுரி, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஜூன் 22- போலனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில், 258 பயனாளிக ளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், போலன அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை தாங்கினார். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தார்.   தொடர்ந்து இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசினார். அப்போது, மக்கள் தொடர்பு திட்ட முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொது மக்களிடமிருந்து 187 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனர்.  இம்முகாமின் மூலம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 258 பயனாளிகளுக்கு ரூ.1,50,79,107 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) வி.கே.சாந்தி, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ஆ.பெருமாள், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.