districts

விவசாயிக்கு ரூ.1.38 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நாமக்கல், ஆக.20- சேவை குறைபாடு காரணமாக வயதான விவசாயிக்கு தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் ரூ 1,38,250/- வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் வசித்து வருபவர் விவசாயி லோகநாதன் (73). இவரது விவசாய நிலத்துக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.3 லட் சத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்திற்கு செலுத்தியுள்ளார். மின்  இணைப்பு வழங்குவதற்கு காலதாமதம் ஏற் பட்டுள்ளது. கடந்த 2020 ஜூன் மாதத்தில்  தமக்கு மின் இணைப்பு வேண்டாம் என தெரி வித்து  செலுத்திய பணத்தை திரும்பத் தரு மாறு மின் உற்பத்தி கழக அலுவலர்களிடம் கடிதம் கொடுத்துள்ளார். முன்னுரிமை அடிப் படையில் செலுத்தப்பட்ட பணம் திரும்ப வழங்க வேண்டும் என்று கரூரில் உள்ள மின் உற்பத்திக் கழகத்தின் தலைமை பொறியா ளர் லோகநாதனுக்கு கடிதம் அனுப்பி உள் ளார். பலமுறை கடிதம் மூலமும் நேரிலும் பணத்தை கேட்ட போதிலும் மின் உற்பத்தி கழகத்தின் சார்பில் லோகநாதனுக்கு பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானார்.  அவர் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் இயக்கு நர், தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியா ளர் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் வழங்கிய தீர்ப் பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சேவை  குறைபாடு புரிந்துள்ளதாக தெரிவித்தனர்.  மேலும், பல மாதங்கள் பணத்தை திரும்ப வழங்காமல் இருந்த மின் உற்பத்தி கழகம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின்னர் கடந்த 2023 நவம்பரில் வழக்கு  தாக்கல் செய்திருந்தவர் செலுத்திய ரூபாய் 3  லட்சத்தை திரும்ப வழங்கி விட்டது. செலுத் திய பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டு  நுகர்வோர் கடிதம் வழங்கிய நாளிலிருந்து அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள் தமிழ் நாடு மின் உற்பத்தி கழகம் பணத்தை திரும்ப வழங்கியிருக்க வேண்டும்.  ஆனால், விவசாயி   செலுத்திய பணத்தை திரும்ப வழங்க 40 மாத காலம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் தாமதம் செய்துள்ளது.  பணம் வழங்குவதற்கான நடைமுறை கால மாக மூன்று மாதத்தை கழித்துக் கொண்டு மீத முள்ள 37 மாதங்களுக்கு ரூபாய் மூன்று லட்சத் துக்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியாக ரூ.83,250/- வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டுமென நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த தீர்ப்பில் உத் தரவிட்டுள்ளது.  மேலும், சேவை குறைபாட்டால் வழக்கு  தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச் சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவு தொகை யாக ரூ.5,000 வழங்கவும் மின் உற்பத்தி  கழகத்திற்கு இந்த தீர்ப்பில் உத்தரவிடப்பட் டுள்ளது.