districts

img

உழவர் சந்தைகளில் ரூ.1.36 கோடிக்கு விற்பனை

சேலம், ஜன.17- சேலம் உழவர் சந்தைகளில்  பொங்கல் விற்பனையாக ரூ. 1.36 கோடிக்கு காய்க றிகள், பழங்கள் விற்பனை ஆகியுள்ளன. சேலம் மாநகரில் 4 உழவர் சந்தைகள் உள் பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 இடங் களில் உழவர் சந்தைகள் செயல்படுகின் றன. மாட்டுப் பொங்கல் தினமான செவ் வாய்க்கிழமையன்று, மாவட்டத்தில் உள்ள  11 உழவர் சந்தைகளில் விற்பனை அதிக மாக இருந்தது. பொங்கல் வழிபாட்டுக்கு தேவையான மஞ்சள் கொத்து, கரும்பு, வாழைப்பழம், தேங்காய், பூசணி உள்பட பல் வேறு பொருட்களை மக்கள் வாங்கிச் சென்ற னர். ஒரே நாளில் ரூ.1 கோடியே 36 லட்சத்து  87 ஆயிரத்து 886-க்கு விற்பனை நடை பெற்றது. அதிகபட்சமாக சூரமங்கலம் உழவர் சந் தையில் கரும்பு, காய்கறிகள், பழங்கள் உள் ளிட்டவை 80.10 டன் அளவுக்கு விற்பனை யானது. இதன்மூலம் ரூ.31.34 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஆத்தூர் உழவர்  சந்தையில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட் டவை 68 டன் அளவுக்கும், ரூ.24.79 லட்சத் துக்கும் விற்பனையானது. சேலம் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில்  கரும்பு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட் டவை 365.15 டன் அளவுக்கு விற்பனையா கின. உழவர் சந்தைக்கு சுமார் 87 ஆயிரத் துக்கும் அதிகமானோா் வந்திருந்து காய்க றிகள், பழங்களை வாங்கி சென்றனர்.