திருப்பூர், டிச.13- திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வட சின்னாரிபாளையம் ஊராட்சி, காட்டுப்பாளையத்தில் நாபர்டு திட்டத்தின் கீழ் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பிக்கும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் வெங்கடேஷன், சுரேஷ்குமார், உதவிப்பொறியாளர் கார்த்திக் ராஜா, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் செந் தில்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.