districts

img

வயநாடு பேரிடர் நிவாரணம் ரூ.1,72,800 ரூபாயை வழங்கிய சிஐடியு

கோவை, ஆக.20- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 800ஐ சிஐடியு கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிதி அளிப்பு நிகழ்வில் வழங்கினர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையில் கோவை மாவட்ட இன்ஜினியரிங் சங்கம் சார்பில் ரூ.82 ஆயிரத்து 500, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம் ரூ.43 ஆயிரத்து 300, மாவட்ட தையல் தொழிலா ளர் சங்கம் ரூ.22 ஆயிரமும், கோவை வடக்கு தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ரூ.15,000 ஆயிரமும், கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாயை சிஐடியு கோவை மாவட்டக் குழு அலுவலகத் தில் செவ்வாயன்று நடைபெற்ற நிதி அளிப்பு நிகழ்வில் வழங்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, துணைத் தலைவர் ரத்தின குமார், சி.துரைசாமி மற்றும் சங்க நிர்வாகி கள் எஸ்.பி.சுப்பிரமணியன், எ.ஜி.சுப்பிரமணி யன், வி.பெருமாள், சிவராஜ், பாலமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.