districts

img

சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1,200 கோடி கடன் வழங்கல்

சேலம், ஜன.25- மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,602 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.1,200 கோடி  வழங்கப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தெரி வித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்  ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளியன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், சேலம் மாவட்டத் தில் 229 பொதுத்துறை வங்கிக்கிளைகள், 189 தனியார் வங்கி கள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 117 அரசு சார்ந்த வங்கிகள் என மொத்தம் 535 வங்கி கள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் இவ்வங்கி கள் மூலம் 2024-25 நிதியாண்டில் வேளாண்மை, கல்விக்கடன்,  மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு  முன்னுரிமை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழு விற்கு ரூ.1,602 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை ரூ.1,200 கோடி வழங்கப் பட்டு, மீதமுள்ள ரூ.402 கோடி கடன் வழங்க வங்கிகளுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் ஆர்வமுடன் தொழில் தொடங்க வரும்  தொழில் முனைவோர்கள் மற்றும் கல்விக் கடன் கேட்டு வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர்களுக்கு வங்கிக்  கடனுதவிகளை விரைந்து வழங்க தேவையான நடவ டிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார். இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரா.கார்த்திகா மற்றும் பல்வேறு  வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.