districts

img

சேலம் அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு வாலிபர், மாதர், மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், நவ.27- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பல மாதங்கள் ஆகியும் மக்களின் உயிர் காக்கும் இதய நோய் கருவியான ஆஞ்சியோ கருவியை இன்று வரை சரி செய்யாமல் வைத் துள்ள மருத்துவமனை நிர்வாகம் உடனடி யாக போர்க்கால அடிப்படையில் சரி செய்ய  வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள  மின் தூக்கி 24 மணி நேரமும் செயல்படு வதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்து வமனை பணி புரியும் மருத்துவர்கள் செவி லியர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பை உருவாக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள அனைத்து கழி வறைகளிலும், தண்ணீர் வசதியை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றித் திரியும் எலிகளை ஒழித்து  சுத்தமாக சுகாதாரமாக வைத்திருக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வாலிபர் சங்க கிழக்கு மாநகர தலைவர் கோபிராஜ், மாதர் சங்க கிழக்கு மாநகர தலை வர் கவிதா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட் டத் தலைவர் பி.ஹரி கிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகநா தன், மாவட்டச் செயலாளர் பெரியசாமி, மாற் றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா ளர் குணசேகரன், மாவட்டப் பொருளாளர் கனகராஜ், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி, மாவட்டச் செயலாளர் எஸ். எம்.தேவி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஞான செளந்தரி உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங் கேற்றனர்.