தமிழ்நாடு சைக்கிள் போலோ சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டி சேலம் மாவட்டம், சிஎஸ்ஐ பள்ளியில் சனியன்று துவங்கியது. மாநில சுற்றுலாத்துறை அமைச்சா ரா.ராஜேந்திரன் இப்போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.