திருப்பூர், நவ.24- உடுமலையில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் கிடங்கிற்கு ‘சீல்’ வைத்தனர். உடுமலை நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகா தார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், எஸ்.ஆறுமுகம், பி.செல் வம், எம்.சிவகுமார், வி.ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனா். இதில் மத்திய பேருந்து நிலையம், பழனி பாதை, கல்பனா சாலை ஆகிய வற்றில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள், பாட்டில்கள் விற்பனை செய்யப் பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளில் இருந்து 75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையா ளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்துஅந்த கிடங்கில் சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்து, கிடங்கிற்கு சீல் வைத்தனர்.