சேலம், அக்.20- சேலம் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ‘ரெடி மேடு’ சுகாதார வாளகம் அமைக்கப்பட்டு வருவது, மக்களி டையே பாராட்டை பெற்றுள்ளது. சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாத தால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மேலும், பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது. இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங் களில் ‘ரெடிமேடு’ சுகாதார வளாகங்களை அமைக்க உத்தர விட்டார். அதன்படி சேலம் அரசு மருத்துவமனை, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ‘ரெடிமேடு’ சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உட் பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக் கும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத் தும் வகையில், குழாய் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால், பொதுமக்கள் உட் பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.