ஊடகத்துறையில் 37 ஆண்டுகள் புகைப்பட நிருபராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள கோவையின் மூத்த புகைப்பட கலைஞர் ஒய்.ஜே.சாதிக் அவர்களின் வழியனுப்பு விழா வியாழனன்று கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், கோவையில் உள்ள சக புகைப்பட கலைஞர்கள் பங்கேற்று நெகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர்.