districts

img

பிரச்சனைகளை திசைதிருப்பவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’

தருமபுரி, டிச.14- மக்களின் அடிப்படை பிரச்சனை களை திசைதிருப்பவே ‘ஒரே நாடு, ஒரே  தேர்தல்’ திட்டத்தை மோடி தலைமையி லான ஒன்றிய அரசு கொண்டு வரத் துடிக்கிறது, என சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் குற்றஞ் சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 24 ஆவது மாநாடு, பாலக்கோட்டில் வெள்ளியன்று பேரணி, பொதுக்கூட்டத்துடன் துவங்கி யது. இதையடுத்து நந்தாஸ் மஹாலில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீதாராம் யெச்சூரி ஆகியோரது நினைவரங்கத் தில் பிரதிநிதிகள் மாநாடு சனியன்று நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் கே.பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். அரூரிலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடியை மத் தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பெற்றுக்கொண்டார். தோழர்கள் எம்.அண்ணாமலை நினைவு ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன்  பெற்றுக் கொண்டார். இதையடுத்து பாலக்கோட்டிலிருந்து டாக்டர் எம்.கே. மாதப்பன், தருமபுரி ஒன்றியத்திலி ருந்து என்.முத்து, பாப்பாரப்பட்டியிலி ருந்து தேவபேரின்பன், பென்னாகரம் கிழக்கு ஒன்றியத்திலிருந்து எம்.ஆறு முகம், மேற்கு ஒன்றியத்திலிருந்து மாரி முத்து சகோதரர்கள், தருமபுரி நகரக் குழுவிலிருந்து கே.எம்.ஹரிபட், நல்லம் பள்ளியிலிருந்து எம்.ராஜேந்திரன் ஆகி யோரது நினைவு ஜோதிகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந் திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்டச் செயலாளர் அ. குமார், செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகராசன், சோ.அருச்சுணன், வி. மாதன், மூத்த தோழர் பி.இளம்பரிதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து மாநாட்டு கொடியை மூத்த தோழர் கே.காளியப்பன் ஏற்றி  வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் சி.நாகராசன் வரவேற்றார். மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர்.  முன்னதாக, பெ.சண்முகம் பேசு கையில், இலங்கையில் தேர்தல் நடை பெற்று இடசாரி கட்சி ஆட்சி அமைத் துள்ளது. அனைத்து சமூக மக்களும் சம மாக நடத்தப்படும்; தமிழர்களின் நிலம்  அவர்களிடமே ஒப்படைக்கப்படும்; தோட் டத் தொழிலாளர்கள், இஸ்லாமியர்கள் தமிழர்கள் என அனைத்து பகுதி மக்க ளின் தேவைகளை பூர்த்தி செய்யப் படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த விஷயம் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. மாற்றம் ஏற் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் தேசிய குழுக்கள் இதனை எதிர்கின்றது கார ணம் இடதுசாரிகள் ஆட்சி அமைத்து விட்டார்களே என்ற எண்ணம் தான். இடதுசாரிகள் பல நாடுகளில் ஆட்சிய மைத்து வருகின்றனர். இந்தியாவில் மதச்சார்பின்மை, அர சியல் சாசனத்தை பாதுக்காக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  அகில இந்திய பொதுச்செயலாளர்  மறைந்த சீத்தாராம் யெச்சூரி அவர்களின்  முன்முயற்சியால் இந்தியா கூட்டணி  உருவாக்கப்பட்டது. கடந்த தேர்தலில் 303 இடங்களை வென்ற பாஜக, தற் போது 240 இடங்களை மட்டுமே வெற்றி  பெற்றுள்ளது. பாஜக கூட்டணி கட்சி களின் தயவால் ஆட்சியமைத்துள்ளது. வலுவான எதிர் கட்சியாக இந்தியா கூட் டணி உருவெடுத்திருக்கிறது. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரும் மாசோதவை அமைச்சரவை கூட்டத் தில் ஒப்புல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த  மசோதா நிறைவேற இரு அவைகளி லும் 3 இல் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இந்த மசோதா நிறை வேறாது என்று தெரிந்தும் அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு  காரணம் மக்களின் இதர பிரச்சனை களை திசைதிருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவை கொண்டு  வந்துள்ளனர். கடுமையான விலை வாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற் றும் சேவை வரியை உயரத்தியுள்ளனர். ஜிஎஸ்டி-யை அதிகளவில் உயர்த்தி யுள்ளனர். கச்சா எண்ணெய் விலை  குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் விலை வாசி கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வில் இருந்து மக் களை காப்பற்ற வேண்டும் இடதுசாரி கள் ஒன்றிணைந்த போராட்டத்தை வலு படுத்த வேண்டியுள்ளது, என்றார். இதைத்தொடர்ந்து, மூத்த தோழர் கள் பாப்பிரெட்டிப்பட்டி எஸ்.தீர்த்தகிரி,  சொக்கலிங்கம், ஏரியூர் என்.பி. இளங்கோ, தருமபுரி ஜி.வெங்கட் ராமன் ஆகியோருக்கு பெ.சண்முகம் சால்வை அணிவித்து கெளரவித்தார். மேலும், பிக்கலி ஊராட்சிக்குட்பட்ட கொல்லப்பட்டி கட்சி உறுப்பினர் தரு மன் கட்சிக்காக 8 சென்ட் நிலத்தை  வழங்கினார். அவருக்கு பெ.சண்முகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரி வித்தார். ஞாயிறன்றும் (இன்று) மாநாடு நடைபெறவுள்ளது.