districts

img

‘சிபிஎம் அலுவலகம் கட்ட நிதி வழங்கிய மழலைகள்’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் ஞாயிறன்று திறக்கப்பட்டது. இக்கட்டடத்திற்கு தனது பங்களிப்பாக சென்னிமலையைச் சேர்ந்த டி.பழனிசாமியின் பேத்திகள்  கயல் மற்றும் இனியா ஆகியோர் தங்களின் சேமிப்பு பணம் ரூ.10 ஆயிரத்தை கட்டட நிதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் வழங்கினர். இதேபோல வீரப்பன்சத்திரம் அர்த்தநாரி ரூ.10 ஆயிரம், காங்கயம் நடராஜ், சித்தோடு மணி-மணிகண்டன் ஆகியோர் தலா 1000 ரூபாய் நிதி அளித்தனர்.