districts

img

உழைக்கும் மக்களுக்காக போராடிய தோழர்களுக்காக ‘விடுதலை’

ஈரோடு, ஜன.17- இந்த மண்ணில் ஒடுக்கப் பட்ட, உழைக்கும் மக்களுக்காக போராடிய பல முகம் தெரியாத தோழர்களுக்கு அஞ்சலி செலுத் தும் முயற்சி தான் விடுதலை திரைப்படம், என இயக்குநர் வெற்றி மாறன் ஈரோட்டில் நடந்த பாராட்டு விழாவில் தெரிவித்தார். விடுதலை திரைப்பட இயக்கு நர் வெற்றிமாறனுக்கு ஈரோடு, பெரி யார் மன்றத்தில் வெள்ளியன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்விற்கு தமிழ்நாடு பழங்குடி மக் கள் சங்க நிர்வாகி வி.பி.குணசே கரன் தலைமை வகித்தார். மே 17 இயக்க திருமுருகன் காந்தி, மூத்த  வழக்கறிஞர் ப.பா.மோகன் உள் ளிட்டோர் பங்கேற்று படக்குழுவி னரை பாராட்டி கௌரவித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்புரை யாற்றிய இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், நமது சொல், செயல், கருத்து நம்முடன் யார் இருக்கி றார்கள் என்பதை தீர்மானிக்கிறது. நம்முடன் நிற்கிறவர்களை வைத்து  விடுதலை படம் நாம் செய்த சரி யான செயல் என்பதை உணர்த்து கிறது. கடந்த 4 ஆண்டுகளாக மார்க்சியம், தமிழ் இலக்கியம்  சார்ந்து நிறைய படித்து, விவா தித்து, எங்கோ, யாருக்கோ நடந்த, யாருடைய போராட்டத்தாலோ கிடைக்கப்பட்ட விடுதலையை காட்ட முயற்சி செய்தது தான் விடு தலை திரைப்படம். இந்த மண்ணில்  ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்க ளுக்காக போராடிய பல முகம் தெரி யாத, வெளியே தெரிவதைப் பற்றி  அக்கறையில்லாத பல தோழர் களின் உருவகம் தான் வாத்தியார் என்கிற பாத்திரம். அப்படிப்பட்ட தோழர்களுக்கான எங்களின் அஞ் சலி தான் இப்படம். இதன் மூலம் நிகழ்கின்ற விவாதம், அதனை அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னெ டுத்து செல்ல வேண்டும் என்பதே எங்கள் ஆசை.  நம் ஊரில் மெயின் ஸ்ட்ரீம் சினிமா எடுத்து தியேட்டருக்கு கொண்டு வந்து காட்ட வேண்டு மென்றால், சென்சார் போர்டு உள் ளது. அவர்கள் அரசின் ஒரு அங்கம். அவர்கள் அந்த அமைப்பை எப்படி பாதுகாக்க வேண்டுமோ அப்படித் தான் செயல்படுவார்கள். அதற்கு எதிராக பேசாத விசயங்களை மட் டும் தான் அனுமதிப்பார்கள். இதை தெரிந்து தான் அங்கு போகி றோம். அவர்கள் நமது படத்தில் சில வசனங்கள், காட்சிகளைக் கேட்கி றார்கள் என்றால் சரி என்று கொடுத்து விட்டு மீதியை கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பதற்கு எப் படி வேலை செய்ய வேண்டுமோ அப்படி தொடர்ந்து வேலை செய்து  கொண்டிருக்கிறோம். இதுபோல படங்கள் எடுப்பதற்கு வரும் காலங் களில் இன்னும் சவால்கள் அதிக மாக இருக்கும் என நினைக்கி றேன்.  ஒரு படம் எடுப்பது என்பது ஒரு  தனி மனித சாதனை கிடையாது. ஒரு குழுவின் சாதனையே. அந்த வகையில் ஒரு குழு சாதித்து அந்த  சாதனைக்கு என்னை அடையாள மாக்கியதற்கு நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன், என்றார்.  முடிவில், ஜி.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.