ஒன்றிய பாஜக அரசின் மூன்று குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JAAC) சார்பில், தலைநகர் டில்லியில் நடத்தவுள்ள பேரணிக்கு, கோயம்புத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் (CBA) சார்பில் சுமார் 70 வழக்குரைஞர்கள், சங்கத்தின் செயலாளர் சுதீஷ் தலைமையில் வெள்ளியன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.