நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, நெசவாளர் காலனி பகுதியில் தைப்பொங்கல் விழாவை ஒட்டி, முதல்முறையாக பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் அப்குதியைச் சேர்ந்த பவதாரணி என்பவர் இரண்டு முறை 67 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை தூக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார்.