கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.