கூடலூர் பகுதியில் வனவிலங்கு தாக்குதலால் மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை தடுக்கக்கோரி கூடலூர் காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.கே.மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், விவசாய சங்க தலைவர் என்.வாசு, சிபிஎம் ஏரியா செயலாளர் எம்.ஆர்.சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.