districts

கும்பகோணத்தில் ஒருவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல்

கும்பகோணம், பிப்.1 - தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறி விப்பையொட்டி கும்பகோணம் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மாநகராட்சி  தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. கும்பகோணம் நகராட்சியாக இருந்த போது 45 வார்டுகள் இருந்தன. தற்போது கும்ப கோணம் மாநகராட்சி அருகே உள்ள தாரா சுரம் பேரூராட்சி மற்றும் ஆறு ஊராட்சிகளை உள்ளடக்கிய வாக்காளர்களை கணக்கில் கொண்டு 48 வார்டுகள் வரையறுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில் தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி வார்டு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு வருகின்றனர். இதுவரை கும்பகோ ணம் மாநகராட்சியின் 5-வது வார்டில் சுயேட் சையாக போட்டியிடுவதற்கு மோகன்ராஜ் என்பவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் போட்டியில் இதுவரை ஒருவர் மட்டுமே வேட்புமனு தக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேட்புமனு தாக்கலின் இறுதி  நாளில் 48 வார்டுகளுக்கும் 400-க்கும் மேற்பட் டோர் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப் படுகிறது.