districts

ஒருவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல்

கும்பகோணம், பிப்.1 - தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பையொட்டி கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மாநகராட்சி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் அறி விப்பை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி வார்டு பங்கீடு குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கும்பகோணம் மாநகராட்சி யின் 5-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு மோகன்ராஜ் என்பவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள் ளார். கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் போட்டியில் இதுவரை ஒருவர் மட்டுமே வேட்புமனு தக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.