கும்பகோணம், ஜூலை 4 கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடை பெற்றது. கிஷோர் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலை மையுரையாற்றினார்.
கல்லூரி செயலாளர் மாலினி விஜய குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி துணைத்தலைவர் விக்னேஷ்.வி.குமார் விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பழம் பெருமை வாய்ந்த இந்திய நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதுவே நமது நாட்டிற்கான பெருமை, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு வாழ்வதை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன.
குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை பெற்றோர்களால் வழங்க முடியும். குழந்தைகளே இந்தி யாவின் மிகப்பெரிய பலம் என்று பேசி னார். முன்னதாக கல்லூரி முதல்வர் க.சரவ ணன் உரையாற்றினார். கல்லூரி வேதியி யல் துறைத்தலைவர் தேவிகா வர வேற்றார். மாஸ் கல்வியியல் கல்லூரி முதல் வர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர்.சர வணன் மற்றும் பி.எஸ்ஸி.பி.எட் முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றது. புதிதாக சேர்ந்த மாணவ- மாணவிகளும், பெற்றோர்களும் விழாவில் கலந்து கொண்டனர். வணிக நிர்வாகவி யல் துறைத்தலைவர் இந்திரா நன்றி தெரிவித்தார்.