districts

img

கும்பகோணம் தீ விபத்து தினம்: ஜூலை 16 கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும்: மாணவர் சங்கம் கோரிக்கை

கல்வி வியாபார தீயில் வெந்து மடிந்த 94 குழந்தைகளின் நினைவு தினமான கும்பகோணம் தீ விபத்து தினம் ஜூலை 16ஐ கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

2004 ஜூலை 16 அன்று கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கோர தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகள்  நினைவு இடத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக கும்பகோணம் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவு இடத்தில் இருந்து சுடரேந்தி பேரணியாக நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தப்பட்டது

அஞ்சலி நிகழ்ச்சியில் மாணவர் சங்க  மாநில செயலாளர் வி.மாரியப்பன், மாநில துணை செயலாளர் அரவிந்தசாமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், ,உள்ளிட்ட மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வி. மாரியப்பன் பேசுகையில்,

கல்வி வியாபாரத்தில் வெந்து மடிந்த 94 குழந்தைகளின் நினைவு தினமான ஜூலை 16 கல்வி வியாபாரத்திற்கு எதிரான கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும்

ஒன்றிய, மாநில அரசுகளின் தனியார்மய கல்விக் கொள்கையின் காரணமாக கட்டண கொள்ளையால் அரசின் பாரா முகத்தாலும் மிக மோசமான உயிரிழப்பு என்பது தொடர்ந்து நடந்து வருகிறது இது அரசு கவனிக்காமல் மாணவர்களின் இறப்பு தொடர்கதையாக உள்ளது இதை தடுத்து நிறுத்த வேண்டும்

சம்பத் கமிஷன் சொல்லி இருக்கக்கூடிய வழிமுறைகளை உடனடியாக அரசு அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

கோர விபத்தில் 94 குழந்தைகள் இறந்த வழக்கு சம்பந்தமாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கினாலும் குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது மீண்டும் தீயில் எரிந்த குழந்தைகளை மீண்டும் அவர்களை தீயில் எரிய விட்டதற்கு சமமாக கருதுகிறோம்  என மாணவர் சங்கம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.