districts

img

கும்பகோணம் 34 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஆ.செல்வம் வாக்குச் சேகரிப்பு

கும்பகோணம், பிப்.5 - கும்பகோணம் மாநாகராட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாள ராக 34 ஆவது வார்டில் மாமன்ற உறுப்பி னர் பொறுப்பிற்கு ஆ.செல்வம் போட்டியிடு கிறார். அவரது வேட்புமனு சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறி விப்பை வெளியிட்டனர்.  இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மாநகராட்சி 34 ஆவது வார்டில் திமுக கூட்ட ணிக் கட்சியினருடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் 34 ஆவது வார்டுக்குட் பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அரிவாள் ,சுத்தி யல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேக ரித்தனர். திருபுவனம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியம் மனு வும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.