கும்பகோணம், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பருத்திச்சேரி ஊராட்சியில் குடமுருட்டி ஆற்று மரப் பாலத்தை சிமெண்ட் பால மாக அமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பருத்தி சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கிளைச் செயலா ளர் வீரமணி தலைமை வகித்தார். விவசா யத் தொழிலாளர் சங்க துணைத் தலை வர் தருமையன், பருத்தி சேரி கிளை பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.
தஞ்சை மாவட்டத்தையும் திருவா ரூர் மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பருத்திச்சேரி குடமுருட்டி ஆற்று மரப்பாலத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு பிறகு, சிமெண்ட் பாலமாக அமைத்திட அதிகாரிகள் உறுதியளித்து எழுதி கொடுத்தனர். ஆனால், அதன்படி இன்னும் பணி கள் நடைபெறவில்லை. எனவே விரை வில் நடவடிக்கை எடுத்து சிமெண்ட் பாலமாக அமைத்திட வேண்டும்.
பருத்திச் சேரி ஊராட்சியில் இடிக்கப் பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பம் மற்றும் கம்பிகளை மாற்றிட வேண்டும். கீரனூர் முடிகொண்டான் ஆற்றுப் பாலத்தில் இருந்து பருத்திச்சேரி-கீழத்தெரு வரை உள்ள சாலை மிக மோசமாக குண்டு குழியுமாக உள்ளது. இதனை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும். புதுக்குளம் ஆக்கிரமிப்பு களை அகற்றி குளத்தை தூர்வார வேண்டும்.
பருத்திச் சேரி ஊராட்சியில் அனை வருக்கும் நூறு நாள் வேலை வழங்கி ரூ.319 கூலியை முழுமையாக வழங்க வேண்டும். கீழ தெருவில் கட்டி முடிக்கப் பட்டு ஓர் ஆண்டாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் பொது சுகாதார வளா கத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சுடுகாட்டிற்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும். ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதுப்பித்து பெயர் பலகை வைக்க வேண்டும். சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். குடமுருட்டி ஆற்றில் பழுத டைந்து இருக்கும் வடிகால் மதகினை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.