districts

ரேசன் கடை அமைக்க  வாலிபர் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி. டிச 16- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பேரண்ட பள்ளி ஊராட்சி தொடுதேபள்ளி கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட  குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கிருந்து உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடந்து தேசிய நெடுஞ்சாலை வழியே பேரண்டபள்ளிக்கு செல்லவதால் அடிக்கடி விபத்திலும் சிக்குகின்றனர். இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு  தனி ரேசன் கடை அமைக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வட்ட வழங்கல் அலுவலர், வட்டாட்சியர், மாநகர ஆணையர் தலையிட்டு உடனடியாக தொடுதேபள்ளிக்கு தனி ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் மெத்தனமாக இருந்தால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இளவரசன் தெரிவித்தார். பேட்டியின்போது கிளைச் செயலாளர் முரளி, தலைவர் தேவராஜ், பொருளாளர் சுரேஷ், ஓசூர் வட்டச் செயலாளர் நாகேஷ்பாபு ஆகியோர் இருந்தனர்.