கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள குணம் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந்தன் துவக்கி வைத்தார். மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதீப்குமார், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, மருத்துவர்கள் ரங்கராஜ், பாலசுப்பிரமணியம், மருதுபாண்டியன்,ஜெயபால், ஜலில் பாட்ஷா, இளங்கோ, மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.