districts

img

மாசு அடைந்த குடிநீரால் ஓசூரில் பெண் உயிரிழப்பா?

கிருஷ்ணகிரி,ஜூன் 19 -
 ஓசூர் மாநகராட்சி, சின்ன எலசகிரி அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 160 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 12 ஆம் தேதி முதல் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர்  வாந்தி, வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. பாதிக் கப்பட்டவர்கள் ஓசூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணகிரி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையடுத்து மாச டைந்த குடிநீரை பரிசோதித் ததில் அதில் கழிவு நீர் கலந்திருப்பது தெரிய வந்தது. சின்ன பழனியப்பா நகரில் வசித்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தை  இளம்பெண் சில்பிதாஸ் (வயது 20) வாந்தி வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டு 13 ஆம்  தேதி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்படும் நிலையில் அவரது இறப்புக்கு மாசு கலந்த குடி நீர் காரணமா? என மருத்துவர்கள் பரி சோதனை செய்து வருகின்ற னர். இந்நிலையில் அன்று  பணியில் இருந்த தண்ணீர் விடும் பணியாளர் சீனிவா சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக அவர் மீண்டும் அதே  பணியை அவர் செய்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்ததில் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.