districts

img

வேளாண் அலுவலக கட்டிடம் செயல்பாட்டுக்கு வருமா?

சூளகிரி, பிப். 17- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண் அலுவலகம் சுமார் 70 ஆண்டு களாக இயங்கி வரு கிறது. பழைய கட்டிடம் என்பதாலும் தானிய கிடங்கு சிறியதாக உள்ள தாலும், சூளகிரியில் இருந்து உத்தன பள்ளி சாலை யில் காவல் நிலையம் அருகே ரூ. 2 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டிடம், தானிய கிடங்கு அலுவலகம் கட்டப் பட்டு செயல்பட்டு வந்தது. கழிவு நீர் கால்வாய் அருகே 5 அடி பள்ளத்தில் கட்டிடம் கட்டப்பட்டதால் அனைத்து கழிவு நீரும் புதிய கட்டிட வளா கத்தில் தேங்கி நின்றது. மேலும் மழைக்காலங்க ளில் மழை நீரும் வந்து சேர்வதால் அலுவலர் கள், விவசாயிகள் அப்பகுதியை கடந்து வர முடியவில்லை. இதனால் மீண்டும் பழைய அலுவலகத்தி லேயே இயங்கி வருகிறது. எனவே இந்த அலுவல கத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.