கிருஷ்ணகிரி,டிச 26- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்கு சூள கிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்க ளுக்குட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப் பள்ளி, நாகமங்கலம் ஊராட்சிகளில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பாசனம் பகுதியில் 3400 ஏக்கர் விளைச்சல் நிலங்களை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சிக்கும் நடவடிக் கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்தனப்பள்ளியில் காத்திருப்பு திங்களன்று (டிச.26) துவங்கியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார் .மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் ஜி.கே.நஞ்சுண்டன், மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் எம்.எம்.ராஜூ வட்டச் செயலாளர்கள் சிவப்பா ராஜா, முனியப்பா, சின்ன ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர் நடராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சரஸ்வதி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், பாதிக்கப்பட்ட விவ சாயிகள் போராட்டக் குழு நிர்வாகிகள் நிர்குணா, மாரப்பா, விஜயகுமார், கோவிந்தராஜ் கஜேந்திர பாபு ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சமரச பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, ஓசூர் சாராட்சியர் அலுவலகத்தில் பேச்சுக்கல் நடைபெற்றது.