கிருஷ்ணகிரி, ஏப். 3 - கச்சத்தீவு பற்றி பேச அண் ணாமலைக்கோ, பாஜக வுக்கோ தகுதியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப் பாடி பழனிசாமி திடீரென பாய்ச்சல் காட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி அதி முக வேட்பாளர் ஜெயபிரகா ஷுக்கு வாக்கு சேகரித்து பேசிய அவர், “கச்சத்தீவை மீட்க நட வடிக்கை எடுத்த கட்சி அதிமுக தான். தேர்தல் நேரத்தில் அர சியல் ஆதாயத்துக்காக இப் போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். தமி ழக மீனவர்களை சிறைபிடித்த போது அது குறித்து எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு பற்றி பேச அண்ணா மலைக்கோ, பாஜகவுக்கோ என்ன தகுதி இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.