கிருஷ்ணகிரி, நவ 13- தேன்கனிக்கோட்டை வட்டம், தளி. கெலமங்கலம் ஒன்றியங்களில் கால்நடை களுக்கு பெரியம்மை நோய் கடந்த சில மாதங்களாக கடுமையாக தாக்கி வருகிறது. கால்நடை துறை அலுவலர்கள் இது குறித்து மெத்தனம் காட்டு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நோயினால் மாடுகள் பாதிக்கப்பட்டும் 25 க்கும் மேற்பட்ட மாடு கள் இறந்தும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கள் பலரும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை நேரில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகும் கால்நடை மருத்துவ துறை அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும், தேன்கனிக்கோட்டை வட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும், கால்நடைகளின் இறப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழையில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் தேன்கனிக் கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது. தளி ஒன்றிய செயலாளர் சந்திர சேகர் தலைமை தாங்கினார். தேன்கனிக் கோட்டை ஒன்றிய செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அனுமப்பா, சிவப்பா, ரமேஷ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர் சாம்ராஜ், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.