districts

img

ஒரே அடையாளச்சான்று வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 27- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் ஒன்றிய முதல் மாநாடு வேப்பனப்பள்ளியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், சண்முகம், சங்கரப்பா ஆகியோர் தலைமை தாங்கினர். சந்திரமவுலி வரவேற்றார். பூலட்சுமி, பாலகிருஷ்ணன், பைரோஸ், வளர்மதி முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் திருப்பதி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் கரூரான், மாவட்டச் செய லாளர் பெரியசாமி, ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொருளாளர் சக்கரவர்த்தி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
நாடு முழுதும் செல்லத்தக்க ஒரே அடை யாள சான்று வழங்க வேண்டும், பராமரிப்பு தொகையாக 3,000 ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக செல்வராஜ், செயலாளராக சண்முகம், பொருளாளராக சங்கரப்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிவா நன்றி கூறினார்.