கிருஷ்ணகிரி, ஏப். 1- கிருஷ்ணகிரி நகர் ராசு வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள், தூய்மை பணியாளர்கள் வசிக்கின்ற னர். இவர்களுக்கு நகராட்சி மூலம் குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து வார்டு உறுப்பினர், நகராட்சி ஆணையர், வட்ட வளர்ச்சி அலு வலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னால் அந்த பகுதி மக்கள் காலி குடங்களு டன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், அரசு அலுவலர்கள் உடனடி யாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர்.இதைய டுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.