தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம், பஞ்சப்படி உடன் இணைத்து வழங்க வேண்டும், 60 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு ரயில் பயண கட்டண சலுகையையும் மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6,7,8 தேதிகளில் நாடாளுமன்ற முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு கோரி கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் கே.கோபிநாத்திடம் இபிஎப் 95 ஓய்வூதியர்கள் நல சங்கத்தினர் மனு கொடுத்தனர். சங்க நிர்வாகிகள் பன்னீர் செல்வம், சுகுமாரன், தேன்சாமி, இளங்கோ, ஜெகநாதன், சின்னன்னன்,பெருமாள்,சிவராமன், சம்பத் உடன் இருந்தனர்.