கிருஷ்ணகிரி,பிப்.11- ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தில் 500 க்கும் மேற்பட்டோ ரிடம் பல கோடி மோசடி செய்த பெண் உள்பட 6 பேரை ஓசூர் அருகே கர்நாடக மாநில காவல்துறையினர் கைது செய்த னர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த பவித்ரா (35) பெங்களூரு ஊரகம் ஆனேக்கல் பகுதியில் ‘புளு விங்ஸ்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவர் கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, சேலம், கர்நாடகாவில் ஆனேக்கல், அத்திப்பள்ளி, சந்தாபுரம் பகுதிகளில் வசிப்பவர்களிடம் தன்னுடைய அறக்கட்டளைக்கு ரிசர்வ் வங்கி யில் இருந்து 17 கோடி ரூபாய் வந்துள் ளது. கடன் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய கடனில் பாதி கொடுத்தால் போதும் என வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.
மேலும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்துடன் கூடிய சில போலி ஆவணங்களையும் காண்பித்து கடன் பெற முன் பணமாக ரூ. 25,000 முதல் 30,000 வரைக்கும் பணம் வசூலித்துள்ளார். அதை நம்பி கர்நாடகா, தமிழ்நாட்டை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் முன்பணம் கட்டி யுள்ளனர். ஆனால், கடன் கொடுக்கவில்லை. முன் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
பணம் கட்டி ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் பவித்ரா, அவரது கூட்டாளி கள் 13 பேர் மீது கர்நாடக மாநில காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி யுள்ளன. இதில் பவித்ரா உள்ளிட்ட 6 பேரை அத்திப்பள்ளி காவல் துறையினர் பிப்.10 அன்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.