கிருஷ்ணகிரி,பிப்.3- காவிரி தெற்கு மண்டல வன சரணா லயம் அமைப்பதை ஒன்றிய-மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலை வர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேன்கனிக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலை மையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
இதில் கலந்து கொண்ட அகில இந்திய துணைத் தலைவர் பி.சண்முகம் பேசுகையில், “தெற்கு மண்டல வன சரணாலயம் அமைந்தால் இப்பகுதி ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். புலிகள் சரணால யம் அமைக்கப்பட்ட திருமூர்த்தி மலை யில் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் செல் போன் கோபுரம் கிடையாது. ஆனால், இணைப்பு கிடைக்கவில்லை. அங்குள்ள மக்கள் செல்போன் பேச முடிவதில்லை. செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்க அந்த பகுதி மக்கள் 8 ஆண்டுகளாக போராடி வரு கிறார்கள்.
ஆனாலும் அனுமதி கொடுக் கப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சரணா லயம் அமைந்தாலும் மக்கள் உடனடி யாக வெளியேற்றப்படுவார்கள். இது மனிதர்கள் வாழும் பூமி, விலங்குகள் மட்டும் இங்கு வாழலாம், மனிதன் வாழக் கூடாதா?, வாழ முடியவில்லை என்றால் வேற்று கிரகத்திற்கு செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பினார். தெற்கு மண்டல வனச் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசும்-மாநில அரசுகளும் கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் கூறி னார்.
அகில இந்திய இணை செயலாளர் டி.ரவீந்திரன், “ஒன்றிய பாஜக நாடு முழுக்க 86 விழுக்காடு விவசாயி களை கடன்காரர்களாக மாறியதுதான் பெரும் சாதனை” என்றார். சிறு குறு நடுத்தர விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு 10 ஆண்டுகளாக கட்டுபடியான விலை கொடுக்கவில்லை, இதனால் விவசா யம் செய்ய முடியவில்லை.
இதனால் வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக வை தோற்கடிப்போம் என்றும் அவர் கூறினார். சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் பேசுகையில்,“ பாஜக ஆட்சிக்கு வந்ததும் விவசாய விளை பொ ருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கும் என்றும் விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் என்றும் கூறியது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 1 லட்சத்து 40 ஆயிரம் விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டதுதான் சாதனை” என்றார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லி பாபு,“தேன்கனிக்கோட்டை அஞ் செட்டி, சூளகிரி மக்களுக்கு இலவச வீடு, மனைப் பட்டா, பல தலைமுறை களாக உள்ள அனுபவ விவசாய நிலங்க ளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்து முற்றிலும் சிதிலம டைந்துள்ள தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கேட்டும் செங் கொடி இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இது தொடரும்” என்றார். முன்னதாக, அம்பேத்கர் விருது பெற்ற தலைவர் பி.சண்முகம் கவுர விக்கப்பட்டார்.
பிரஜா நாட்டிய மண்டலி கலைக்குழு நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் மாநில பொருளாளர் பெருமாள்,ஏ.வி. சண் முகம், மாவட்ட தலைவர்கள் ஆர்.சேகர், சாம்ராஜ், இருதயராஜ், பி.பெருமாள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் ஆகியோர் உரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் முருகேசன், பொருளாளர் எம்.எம். ராஜூ, சந்திரசேகர், சிவப்பா, அனுபப் பா, சீனிவாசன்,சரஸ்வதி, குமார வடிவேல் திம்மாரெட்டி,வெங்கடேஷ் ராஜா,தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.