கிருஷ்ணகிரி, மார்ச் 30- சூளகிரி பகுதி உத்தனப்பள்ளி அருகே சானமாவு கிராமத்தில் 1999ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத் துறை யால் 41 பயனாளிகளுக்கு வீடு கட்டி கொள்வதற்கான பட்டா வழங்கப் பட்டது. இந்நிலையில் அந்த நிலத்தை பயன்படுத்தி வந்த தனிநபர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நிலத்தை அரசிடமிருந்து பட்டா பெற்ற பயனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை இந்த வழக்கு குறித்து தீவிர கவனம் செலுத்தாததால் 2016 ஜனவரியில் தலித் மக்களுக்கும், அரசுக்கும் பாதகமாக வழக்கு அமைந்தது. ஏற்கனவே நிலத்தை பயன்படுத்தி வந்தவர் சார்பில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடை பெற்றது. இந்த பிரச்சனையில் அரசு தீவிர கவனம் செலுத்தி மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சானமாவு கிராமத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, ஆதிதிராவிட நலத் துறையால் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த நிலத்தை ஆக்கிரமிக்க மீண்டும் முயற்சித்த போது தலித் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து தடுத்து நிறுத்தினர். அப்போது, நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கு முடிவுக்கு வந்து அரசு எங்களுக்கு நிலத்தை ஒப்படைக்கும் வரை இனி ஆக்கி ரமிப்பில் ஈடுபட மாட்டோம் என்று ஆக்கிரமிப்பாளர்கள் எழுதிக்கொடுத்த னர். மாறாக, அந்த நிலத்தை ஆக்கிர மிக்க முயன்றனர். இதுகுறித்து தகவ லறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், சானமாவு கிராம நிர்வாக அலுவலர், உத்தனப்பள்ளி காவல் நிலை யத்தில் புகார் செய்து ஆக்கிரமிப்பை நிறுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சி யில் ஈடுபட்டுவருவதால், இந்த வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து 41 பயனாளிகளுக்கு அரசு வழங்கிய பட்டா நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு வட்டாட்சியர் பெரி யண்ணனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி, வழக்கு முடிவுக்கு வரும் வரைக்கு நிலத்தில் விளம்பர பலகை வைக்கப்படும் என்றும் ஆக்கிரமிப்பார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.