கிருஷ்ணகிரி, நவ 4- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்திலுள்ள கொத்தூரில் வசிக்கும் வசந்தா பிரசவத்திற்காக கடந்த 20ஆம் தேதி உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப் பட்டார். மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களே பிரசவம் பார்த்ததில் குழந்தையின் கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதை தெரிவிக்காமல் உடனடியாக தாய், குழந்தை இருவரையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தவறான முறையில் பிரசவம் பார்த்ததால் குழந்தைக்கு ஒரு கையில் இரண்டு இடத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், இதை இங்கு குணப்படுத்த முடியாது, மேல் சிகிச்சைக்கு வெளி மருத்துவமனைக் குதான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை பேசியும் தீர்வு எட்டப்பட வில்லை. இதனால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட பொறுப்பு செயலாளர் நஞ்சுண்டன், மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சூளகிரி வட்டச் செயலாளர் முனியப்பா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் எம்.எம்.ராஜூ, தலைவர் முருகேஷ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர்.ெஜயராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் பாதிக்கப் பட்ட குழந்தையுடன் அரசு மருத்துவ மனை வளாக சாலையில் அமர்ந்திருந்த வசந்தாவை சந்தித்து நலம் விசாரித்த னர். அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் ஞான மீனாட்சியை சந்திக்க சென்றனர். அப்போது அவர் மருத்துவமனையில் இல்லை. இதனை யடுத்து, அவரது கைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், தலைமைச் செயலகத்தின் மருத்துவப் பிரிவு அலுவலருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அலுவலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, தாயும் குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து டில்லிபாபு கூறுகை யில், “மாவட்டத் தலைமை மருத்துவ மனையாக அறிவிக்கப்பட்டுள்ள ஓசூர் அரசு மருத்துவமனையில் 46 மருத்து வர்கள் இருக்க வேண்டும். ஆனால் 16 மருத்துவர்களே உள்ளனர். செவிலியர் கள் எண்ணிக்கையும் பற்றாக்குறை உள்ளது. 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இதயம், நரம்பியல் பிரிவிலும், எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவிலும் மருத்துவர்கள் இல்லை”என்றார்.