மத்தூர், நவ. 5- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அருகே உள்ள வாட மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் படிக்கும் மாணவர்கள் கிருஷ்ண கிரி மாவட்ட வருவாய் அளவில் நடை பெற்ற 14 வயது மாணவ மாணவி களுக்கான கை எறி பந்து போட்டி யில் கலந்து கொண்டு மாவட்ட அள வில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற னர். வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் மாநில அளவில் செங்கல்பட்டில் நடைபெறும் போட்டி யில் பங்கேற்க உள்ளனர். வெற்றிஹ பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் உடற்கல்வி ஆசி ரியர் ெஜயேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம், ஆசிரி யர்கள் பழனியப்பன், அகிலா, லொக நாதன், சத்தியசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் வர வேற்றார், இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் மாணவர்கள் கூறுகை யில், எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உப கரணங்கள் இல்லாததால் எங்க ளால் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதா னத்தை சீர்படுத்தி விளையாட்டு உப கரணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.