கிருஷ்ணகிரி, அக் 29- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமய நிலங்களில் குடியிருப்பவர்களை பாதுகாக்க மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாவட்டத் தலைவர் சபாபதி தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட 10 ஒன்றியங்களில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அறநிலையத் துறையின் நட வடிக்கைகள் மற்றும் சட்ட நடை முறைகள், அடிமனை வாடகைக்கு குடியிருக்கும், குத்தகை விவசாயம் செய்வோரின் உரிமைகளை பாது காப்பது குறித்து விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், கடந்த மார்ச் 18இல் நடை பெற்ற அறநிலையத்துறை தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட 12 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வாடகை நிர்ணயக் குழுவின் முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநிலத் தலைவர் வ.செல்வம், மாவட்டச் செயலாளர் அனுமப்பா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.