districts

பேருந்தில் ஆபத்தான பயணம்: கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, பிப். 9- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் தற்போது இயங்க துவங்கி யுள்ள மூன்றாவது சிப்காட் தொழிற்சாலை கள், ஏற்கனவே உள்ள கிரானைட் தொழிற் சாலைகள் விரிவாக்கம், டாட்டாவின் எலக்ட்ரானிக் தனியார் தொழிற்பேட்டை என அசுர வேகத்தில் தொழில்கள் வளர்ந்து  வரும் பகுதியாக மாறி வருகிறது. இதனால்  போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சூளகிரி பேருந்து நிலையம் முதல் ராமன் தொட்டி வரை உள்ள 15 கி.மீ. தூரத்திற்கு இடையில் பெத்த சிகரளப்பள்ளி, கும்பளம் ஊராட்சிகளில் 12  கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு காலை நேரத்தில் தடம் எண் 49 சி பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால் இந்த  பகுதியில் இருந்து தொழிலாளர்கள், மாண வர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சூளகிரி  பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய நிலை  உள்ளது. சூளகிரி முதல் கொட்டாயூர் வரை தடம்  எண் 12 சி பேருந்து செல்லும் சாலையில் துறிஞ்சிப்பட்டி, திராடி, காருபெல்லா ஊராட்சி என 15 கிராமங்கள் உள்ளன. இந்தப்  பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூளகிரிக்கு செல்ல வேண்டி யுள்ளது. 15 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த பகுதியில் இருந்து காலை ஒரு முறை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. உட்புற கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்துதான் பேருந்து ஏறவேண்டிய நிலை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பேருந் துகளில் மூச்சு விடக்கூட முடியாத அளவில்  பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் தொழிலாளர்களும், மாணவர்க ளும் ஆபத்தான முறையில் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை நீடிக்கி றது. மேலும் பலர் கீழே விழுந்து விபத்துக் குள்ளாகியும் உள்ளனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு தேவைக்கேற்ப காலை மாலை நேரங்க ளில் இரண்டு வழித் தடங்களிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என விவசாயிகள் சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.