districts

டிப்பர் லாரி திருடிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, பிப். 9- சேலம் மாவட்டம், ஓமலூர் செங்கரபு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (39). இவரது டிப்பர் லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி நரிப்புரம் பகுதியை சேர்ந்த முருகேசன்,  ஓசூர் தும்மனப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 2 பேர் திருடியதாக பாகலூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து,  டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

;