காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள்ளூர் ஆரியம்பாக்கம் கிராமத்தில் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 12 தொழிலாளர்களை பணிஇடைநீக்கம் செய்த நிர்வாகத்தை கண்டித்து சுங்குவார்சத்திரம் காந்தி சிலை அருகே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாநிலச்செயலாளர் இ.முத்துக்குமார் பங்கேற்று தொழிலாளர் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் ஜூலை8 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தப் போவதாக எச்சரித்தார்.