districts

img

காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 292 பயனாளிகளுக்கு இழப்பீடு

காஞ்சிபுரம், ஜூன் 10 - காஞ்சிபுரத்தில் நடை பெற்ற மக்கள் நீதிமன்றத் தில் 292 பயனாளிகளுக்கு ரூ.12.47 கோடி இழப்பீட்டுத்  தொகையாக வழங்கப் பட்டது.

காஞ்சிபுரம் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத் தில் மக்கள் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி தலைமையில் கூடியது.

மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கு மற்றும்  தொழிலாளர் நல வழக்கு கள், மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வராக்கடன் வழக்கு,நில ஆர்ஜித வழக்கு ஆகியன உட்படமொத்தம் 1800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 292 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மூலம் 292 பய னாளிகளுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி ரூ.12.47 கோடி இழப்பீட்டுத் தொகை யாக வழங்கினார். முன்ன தாக தொழிலாளர் நல  நீதிபதி சுஜாதா, தலைமைக் குற்றவியல் நீதிபதி எம்.வசந்தகுமார், கூடுதல் சார்பு நீதிபதி டி.திருமால், முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிமன்ற நீதிபதி பி.டி.சதீஷ்குமார், குற்றவி யல் நீதிபதி இனியா கருணா கரன் ஆகியோர் பங்கேற்று பேசினார்.